‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
நேபாளி, தொட்டி ஜெயா, 6 மெழுகுவர்த்திகள், ஏமாலி படங்களை இயக்கிய வி.இசட் துரை, அடுத்து இயக்கும் படம் இருட்டு. ஸ்கிரீன் மீடியா என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. சுந்தர் சி. போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மாடல் அழகி சாக்ஷி பர்வீந்தர் நடிக்கிறார். இப்போது இருட்டு டீமில் தன்ஷிகாவும் இணைந்திருக்கிறார். இவர்கள் தவிர விடிவி.கணேஷ், யோகிபாபு, உள்பட பலர் நடிக்கிறார்கள். கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசை அமைக்கிறார், கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்கிறார்.
"படப்பிடிப்புகள் கடந்த சில வாரமாக ஊட்டியில் நடந்து வந்தது. இங்கேயே 85 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்திருக்கிறது. ஒரு சில காட்சிகள் மட்டுமே பாக்கி உள்ளது. அது கிராபிக்ஸ் தொடர்புடைய காட்சி என்பதால் ஐதராபாத் மற்றும் சூரத்தில் நடக்கிறது.
இது புதுமையான ஹாரர் படம். பேயே இல்லாத ஹாரர் படம் இது. எனக்கு பேயே இல்லாத ஹாரர் படம் ஒன்றை இயக்க வேண்டும் என்று ஆசை. அதை நான் இப்படத்தில் சரியாக செய்துள்ளேன் என்று நினைக்கிறேன்" என்கிறார் இயக்குனர் வி.இசட் துரை.