தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் |
பவர்பாண்டி படத்தை அடுத்து நாகார்ஜூனா, சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா, அதிதிராவ் என பல முன்னணி நடிகர் நடிகைகளை வைத்து தனது இரண்டாவது படத்தை இயக்கி வருகிறார் நடிகர் தனுஷ். இந்த சரித்திர படம் 600 ஆண்டுகளுக்கு முந்தைய கதையில் உருவாகி வருகிறது.
திருநெல்வேலி மண்வாசனை கதையில் தயாராகும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்ற நிலையில், அடுத்தபடியாக தமிழகத்திலுள்ள ஒரு முக்கிய கிராமத்தில் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடக்கிறது. இந்நிலையில், இந்த படத்தில் நாயகியாக நடிக்கும் அதிதி ராவ், தனுஷின் இயக்கம் குறித்து ஒரு தகவல் வெளியிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், ஏற்கனவே தனுசுடன் ஒரு படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. கால்ஷீட் பிரச்சினையால் நடிக்க முடியவில்லை. இப்போது அவர் இயக்கும் மெகா படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. தனுஷ் ஷாட் வைப்பதே புதுமையாக உள்ளது. அதோடு, காட்சிகளை அவர் விளக்கி வேலை வாங்குவது மிகவும் திருப்திகரமாக உள்ளது. அந்த வகையில், ஒரு இயக்குனராகவும் என்னை கவர்ந்து விட்டார் தனுஷ் என்கிறார் அதிதி.