சோனி விழா : வருகிறது புதிய சேனல் | கடும் எதிர்ப்பால் மனோஜ் பாஜ்பாய் படத் தலைப்பு மாற்றம் | தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்கு தடை விதிக்க மறுப்பு | பிளாஷ்பேக் : படம் பார்க்கும் பெண்களுக்கு குடம் பரிசு | பிளாஷ்பேக் : 2 ஆங்கில படங்களை தழுவி உருவான 'தங்கமலை ரகசியம்' | யார் ஆரம்பித்தது என தெரியவில்லை, பயமாக உள்ளது : மிருணாள் தாகூர் | 'டாக்சிக்' வியாபாரம், வங்கிக் கணக்கு வெளியிடுகிறேன் : தில் ராஜு | முதல் படம் 'மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ்: வீடியோ வெளியிட்டு திரிஷா நெகிழ்ச்சி | மூன்று மொழிகளிலும் வேகமாக வளரும் அனஸ்வரா ராஜன் | அதர்வாவின் இதயம் முரளி படத்தில் பஹத் பாசில் |

தமிழ்சினிமா வரலாற்றில் அதிக வசூல் சாதனை செய்த படம் என்றால் பாகுபலி- 2 படம்தான். இப்படம் தமிழகத்தில் சுமார் 150 கோடியை வசூலித்து விநியோகஸ்தர்களுக்கும், தியேட்டர்காரர்களுக்கும் தலா 72 கோடி ஷேர் கொடுத்தது.
அதற்கு அடுத்து தமிழகத்தில் வசூல் சாதனை செய்த படம் மெர்சல். 120 கோடி வசூலித்து 60 கோடி ஷேர் கொடுத்தது. இந்நிலையில், பொன் ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'சீமராஜா' படத்தில் 14 ஆம் நூற்றாண்டில் நடக்கும் காட்சிகள் 15 நிமிடங்கள் இடம்பெறுகின்றன.
இந்தப் படத்தில் இடம்பெறும் பீரியட் காட்சிகளை டிரைலரில் பார்த்துவிட்டு சமூக வலைதளங்களில் சிலர் கிண்டல் பண்ணினார்கள். சீமராஜா படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில், “இந்த டிரைலரின் கடைசி 3 ஷாட் பார்த்து, 'பாகுபலி மாதிரி இருக்கு' என சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்தன. அது எங்களுக்கு, எங்கள் உழைப்புக்கு கிடைத்த பெருமை” என்று சிவகார்த்திகேயன் கூறினார்.
இதன் தொடர்ச்சியாக சீமராஜா படத்தின் முதல்நாள் வசூல் பாகுபலி 2 படத்தின் முதல்நாள் வசூலைவிட அதிகம் என்று சிலர் சமூகவலைதளங்களில் செய்தி பரப்பி வருகின்றனர். படத்துக்கு பில்ட்-அப் கொடுக்க வேண்டியதுதான்... அதுக்காக இப்படியா?