ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
திருமணம், குழந்தை பிறப்பால் சினிமாவிற்கு சில ஆண்டுகள் ஓய்வு கொடுத்திருந்த நடிகை ஜோதிகா, 36 வயதினிலே படம் மூலம் ரீ-என்ட்ரியானார். கதாநாயகியை மையமாக வைத்து வெளிவந்த இப்படம் வரவேற்பை பெறவே, தொடர்ந்து மகளிர் மட்டும், நாச்சியார் படங்களில் நடித்தார்.
தற்போது, மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம் மற்றும் ராதா மோகனின் காற்றின் மொழி படங்களில் நடித்துள்ளார். இரண்டு படங்களும் அடுத்தடுத்து ரிலீஸாகின்றன. இந்நிலையில் ஜோதிகாவின் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தீரன், அருவி போன்ற படங்களை தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் ஜோதிகா நடிக்கிறார். கார்த்திக் சுப்பராஜிடம் உதவியாளராக இருந்த ராஜ் என்பவர் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். படத்திற்கு இன்னும் தலைப்பு முடிவாகவில்லை. மற்ற நடிகர்கள் தேர்வு நடக்கிறது. அக்டோபர் முதல் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.