ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம் படத்தை முடித்து விட்ட சிம்பு, அடுத்தப்படியாக வெங்கட்பிரபுவின் மாநாடு படத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் சிம்புவிற்கு புதிதாக ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு, பேசன் மூவி மேக்கர்ஸ் என்று நிறுவனம் சிம்புவை வைத்து அரசன் படத்தை எடுக்க ஒப்பந்தம் செய்தது. இதற்காக அவருக்கு முன்பணமாக ரூ.50 லட்சம் கொடுக்கப்பட்டது. இதுநாள் வரை படம் தொடங்கப்படவில்லை. சிம்பு கால்ஷீட் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனம் கொடுத்த முன்பணத்தை திருப்பி கேட்டுள்ளது. ஆனால் சிம்பு பணத்தை தரவில்லை. இதையடுத்து சிம்பு மீது சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது தயாரிப்பு நிறுவனம். சிம்பு வாங்கிய முன்பணத்தை வட்டியுடன் சேர்த்து தரும்படி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, சிம்பு தன் தரப்பு நியாயத்தை கூறினார். அதாவது சரியான நேரத்தில் படத்தை தொடங்கவில்லை என்றார். ஆனால் நீதிபதிகள் இதை ஏற்கவில்லை. 4 வாரங்களுக்குள் சிம்பு ரூ.50 லட்சம் பணத்தை வட்டியுடன் சேர்த்து ரூ.85 லட்சமாக பேசன் மூவி நிறுவனத்திற்கு வழங்க உத்தரவாதம் அளிக்க வேண்டும். இல்லையென்றால் அவரின் கார், செல்போன் மற்றும் வீட்டில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய நேரிடும் என எச்சரித்துள்ளது.