‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பிரஷாந்த் நடிப்பில் ஆர்.கே.செல்வமணி இயக்கிய செம்பருத்தி படத்தில் அறிமுகமானவர் நடிகை ரோஜா. அதன்பிறகு ரஜினிகாந்த், விஜயகாந்த் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்தார். பின்னர் தன்னை சினிமாவில் அறிமுகம் செய்த இயக்குநர் செல்வமணியையே 2002ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
சில ஆண்டுகளாக சென்னையில் இருந்த ரோஜா, ஒரு கட்டத்தில் தனது சொந்த ஊரான ஆந்திராவுக்கு சென்றவர், தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார். அதையடுத்து இரண்டு முறை நகரி எம்எல்ஏ தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த ரோஜா, பின்னர் ஒய்எஸ்ஆர் காங்கிரசில் இணைந்தார். அதன்பிறகும் அதே நகரி தொகுதியில் போட்டியிட்டவர் வெற்றி பெற்று தற்போது எம்எல்ஏவாக இருக்கிறார்.
இந்நிலையில், நகரி தொகுதியில் வாடகை வீடு பிடித்து குடியேறியிருந்த ரோஜா, தற்போது நகரி தொகுதியிலேயே ஒரு பங்களா கட்டியுள்ளார். அந்த பங்களாவின் கிரஹப்பிரவேசம் நேற்று நடந்துள்ளது. அதில் ஏராளமான ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்துள்ளனர்.