‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
சமந்தா நடிப்பில் செப்டம்பர் 13-ந்தேதி மூன்று படங்கள் திரைக்கு வருகிறது. அதாவது சீமராஜா, யுடர்ன் ஆகிய படங்கள் தான் இதுவரை சமந்தா நடிப்பில் வெளியாகும் படங்கள் கூறப்பட்டு வந்தன. ஆனால் இப்போது தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் இணைந்து அவர் நடித்த படம், நெஞ்சமெல்லாம் பல வண்ணம் என்ற பெயரில் தமிழில் செப்டம்பர் 13-ந்தேதி வெளியாகிறது.
இந்நிலையில், 2018ம் ஆண்டு ஆரம்பத்தில் தனது நடிப்பில் வெளியான மூன்று படங்களுமே வெற்றி பெற்ற நிலையில், வரப்போகிற படங்களும் வெற்றிபெறும் என்று கூறும் சமந்தா, அடுத்தபடியாக நடிப்பதற்கு தற்போது தீவிரமாக கதைகளை கேட்டு வருகிறாராம்.
இதுபற்றி அவர் கூறுகையில், எந்த கதையை கேட்டாலும் அந்த கதையை சொல்பவர் யார் என்பதை நான் கருத்தில் கொள்வதில்லை. கதையே கேட்கும்போதே அந்த கதாபாத்திரம் என் மனதில் ஓடத்தொடங்கி அதில் நான் பயணிக்கத் தொடங்கிவிட்டால் அந்த கதையை ஓகே செய்து விடுகிறேன்.
அந்த கதாபாத்திரம் குறித்து எனக்கு தோன்றும் சந்தேகங்களை இயக்குநர்களிடம் கேட்பேன். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் சரியாக இருக்கும்பட்சத்தில் இன்னும் அந்த கதையில் ஈடுபாடாகி விடுகிறேன் என்கிறார் சமந்தா.