ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
தென்னிந்திய நடிகர் சங்க 65வது பொதுக்குழு கூட்டம் பலத்த பாதுகாப்புடன் சென்னையில் இன்று மதியம் 2 மணிக்கு துவங்கியது.
சங்க தலைவர் நாசர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் சங்க செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. துனைத்தலைவர் கருணாஸ் வரவு செலவு கணக்குகளை வாசித்து ஒப்புதலுக்கு சமர்ப்பிப்பார்.
கட்டிடம் கட்டும் பணி நடைபெறுவதால் சங்கத்தின் நவம்பர் மாதம் தேர்தல் தள்ளிவைக்கவும் மற்றும் தேர்தலை நடத்த 20 லட்சம் வரை செலவாகும் என்பதால் தேர்தலை நடத்தாமல் நிர்வாகிகள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டால் அந்த பணம் மிச்சமாகும். அதை கட்டட பணிகளுக்கு பயன்படுத்தலாம் என்று விஷால் தரப்பு பொதுக்குழுவில் பேச இருப்பதாக தெரிகிறது.
ஆனால், அவர்களுக்கு எதிராக களம் இறங்கும் டி.ராஜேந்தர், ராதாரவி, சரத்குமார், ஜே.கே.ரித்திஷ், எஸ்.வி.சேகர், உள்ளிட்டோர் தேர்தலை குறிப்பிட்ட தேதியில் நடத்த வேண்டும் என்று உறுதியாக உள்ளனர்.
இந்த நிலையில், விஷாலால் திருட்டு விசிடி ஒழிப்பு பிரிவுக்கு நியமிக்கப்பட்ட ஒருவர் மீது பல கோடி ரூபாய் ஊழல் புகார் எழுப்பப்பட்டுள்ளது. நாடக நடிகர்களுக்கு அறிவித்த பல சலுகைகள் இன்னும் வழங்கப்படவில்லை. நீக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு பொதுக்குழுவில் அனுமதி பெற வேண்டும் என்ற கேள்விகள் கேட்கப்படும் என தெரிகிறது.
சங்கம் சார்பில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாதுகாப்புக்காக மனு கொடுக்கப்பட்டு உள்ளது. மற்றும் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.