‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை எம்.ஜி.ஆர். திரைப்படமாக எடுக்க விரும்பினார். பிறகு கமல்ஹாசன் முயற்சி செய்தார். கடைசியாக மணிரத்னம் பொன்னியின் செல்வன் கதையை இயக்க விரும்புவதாக சொன்னார்.
இந்நிலையில் மணிரத்னத்தின் 'செக்கச் சிவந்த வானம்' திரைப்படம் குறித்து வெளியான ஒரு தகவல், பொன்னியின் செல்வன் படம் பற்றி பேச வைத்துவிட்டது.
'செக்கச் சிவந்த வானம்' படத்தில் அரவிந்த் சாமி ஏற்று நடிக்கும் கேரக்டர் பெயர் 'வரதன்', அருண் விஜயின் கேரக்டர் பெயர் 'தியாகு', விஜய்சேதுபதியின் கேரக்டர் பெயர் 'ரசூல்', சிம்புவின் கேரக்டர் பெயர் 'எத்தி' என்பதை ஒவ்வொரு போஸ்டரின் வெளிப்படுத்தினார் மணிரத்னம்.
ஒவ்வொரு கேரக்டரும் 'பொன்னியின் செல்வன்' கதையில் வரும் கேரக்டர்களின் தன்மையைப் பிரதிபலிப்பது மாதிரியான தோற்றத்தை தருகிறது. எனவே, 'செக்கச் சிவந்த வானம்' பொன்னியின் செல்வன் கதையை உல்டா செய்த படமாக இருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.