‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் விஸ்வரூபம் 2ம் பாகத்திற்கு மக்கள் பெரும் வரவேற்பு கொடுத்திருப்பதாக கூறினார். அவர் மேலும் கூறியதாவது:
விஸ்வரூபம் படத்திற்கு இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. சிலர் இடையூறு செய்கிறார்கள். அது படத்திற்கு நல்ல விளம்பரத்தை தரும் என்று நம்புகிறேன். இந்த வெற்றிக்காக நிறைய நாள் காத்திருந்தோம். படத்தில் மக்கள் நீதி மையத்தின் பாடல் இடம்பெற்றுள்ளது. ஆனால் இது படத்தின் கதையை பாதிக்காது. இனி வாய்ப்புள்ள எல்லா இடங்களிலும் இந்த பாடலை பயன்படுத்துவோம்.
ஹே ராம், விருமாண்டி படங்களில் எனது கருத்து இருந்ததைபோல விஸ்வரூபத்திலும் எனது கருத்துக்களை சொல்லியிருக்கிறேன். எல்லாவற்றையும் தாண்டி படத்திற்கு ரசிகர்கள் கொடுத்திருக்கும் வரவேற்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்றார்.