'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சமீபகாலமாக தனது அதிரடியான பாலியல் புகார்களால் தெலுங்கு திரையுலகம் மட்டுமல்லாது தமிழ் திரையுலகையும் ஆட்டம் காண வைத்து வருகிறார் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி. வாராகி என்பவர் ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் மலையாள சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த ஸ்ரீரெட்டி, "மலையாள நடிகை ஒருவர் பாதிக்கப்பட்டபோது ஒட்டுமொத்த திரையுலகமே அவருக்கு ஆதரவாக நின்றது. ஆனால் நான் தனி மனுஷியாக எந்த ஆதரவுமின்றி இருக்கிறேன்.
என் பெற்றோர் கூட என் பக்கம் இல்லை. தொடர்ந்து என்னை ஒரு விலைமாது போலவே சித்தரித்து வருகின்றனர். இதனால் தற்கொலை எண்ணமே மேலிடுகிறது. எனக்கான நீதி கிடைக்காத பட்சத்தில் என்னை நானே அழித்துக்கொள்வதை தவிர வேறு வழியில்லை" என கண்ணீர் மல்க கூறியுள்ளார் ஸ்ரீரெட்டி.