தேர்தல் நேரத்தில் களமிறங்கும் நட்டியின் ‛டிஎன் 2026' படம் | 50 கோடியை கடந்த ‛யூத்' | லீடர் இப்படி இருந்தால் வீடும், நாடும் நன்றாக இருக்கும் : ஐஸ்வர்யா | 2026 சட்டசபை தேர்தல் : களம் இறங்கும் சினிமாகாரர்கள் | தெலுங்கு இயக்குனருடன் இணையும் பிரதீப் ரங்கநாதன் | தொடர்ந்து தெலுங்கில் சீனியர் நடிகர்களுக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ் | ராவடி படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | தமிழ் சினிமாவின் வசூல் வறட்சி…. கோடையில் தீரும்…??? | ரூ.100 கோடி வசூல் : ஏன் இந்த வௌம்பரம்…? | பிளாஷ்பேக் : உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவான “சாது மிரண்டால்” |

சமீபகாலமாக தனது அதிரடியான பாலியல் புகார்களால் தெலுங்கு திரையுலகம் மட்டுமல்லாது தமிழ் திரையுலகையும் ஆட்டம் காண வைத்து வருகிறார் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி. வாராகி என்பவர் ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் மலையாள சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த ஸ்ரீரெட்டி, "மலையாள நடிகை ஒருவர் பாதிக்கப்பட்டபோது ஒட்டுமொத்த திரையுலகமே அவருக்கு ஆதரவாக நின்றது. ஆனால் நான் தனி மனுஷியாக எந்த ஆதரவுமின்றி இருக்கிறேன்.
என் பெற்றோர் கூட என் பக்கம் இல்லை. தொடர்ந்து என்னை ஒரு விலைமாது போலவே சித்தரித்து வருகின்றனர். இதனால் தற்கொலை எண்ணமே மேலிடுகிறது. எனக்கான நீதி கிடைக்காத பட்சத்தில் என்னை நானே அழித்துக்கொள்வதை தவிர வேறு வழியில்லை" என கண்ணீர் மல்க கூறியுள்ளார் ஸ்ரீரெட்டி.




