‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தன்னுடைய 43-வது பிறந்த நாளை நடிகர் சூர்யா, இருதினங்களுக்கு முன் கொண்டாடினார். ஒவ்வொரு ஆண்டும், தன்னுடைய பிறந்த நாளில், மக்கள் சேவை செய்வதில் ஆர்வமாக இருப்பார் சூர்யா. இந்தாண்டும், தன்னுடைய பிறந்த நாளில் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் சூர்யா.
அந்த அறிவிப்பில் சூர்யா கூறியிருப்பதாவது : நாடு எவ்வளவோ முன்னேறி விட்டாலும், பல இடங்களில் தேவையான கழிப்பறை வசதிகள் இல்லை. குறிப்பாக, அரசுப் பள்ளிகளின் நிலை படு மோசமாகவே உள்ளது. இப்படிப்பட்ட 400 அரசு பள்ளிகளின் கழிப்பறைகளை கண்டுபிடித்து, அதை புதுப்பித்து தர எண்ணியுள்ளேன். அதற்கான பணிகள், விரைவில் துவங்கும். இந்தப் பணிகளை கவனிக்கு ஒரு குழு அமைக்கப்படும்.
கழிப்பறையை கட்டி முடித்து, பயன்பாட்டுக்கு விட்டுள்ள நிலையிலும், கழிவறைக்கான தண்ணியை முழுமையாக வழங்குவதோடு, கழிவறையை புதுப்பித்துத் தர முன்வந்துள்ளேன். கழிவறைகளை புதிதாக கட்டிக் கொடுத்தால் மட்டும் போதாது. அவைகளை முறையாக பராமரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.