ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கேரள அரசு திரைப்பட விருது வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக மோகன்லால் கலந்துகொள்ள இருக்கிறார் என சமீபத்தில் ஒரு அறிவிப்பு வெளியானது. ஆனால் இதற்கு திரையுலகை சேர்ந்த ஒரு சாராரிடமும் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இது தொடர்பாக திரையுலகை சேர்ந்த நடிகர்கள், இயக்குனர்கள் உட்பட சுமார் 107 பேர் கையெழுத்திட்ட கடிதம் ஒன்று கேரள முதல்வருக்கு அனுப்பப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதில் முக்கியமாக நடிகர் பிரகாஷ் ராஜூம் கையெழுத்திட்டுள்ளார் என ஒரு தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவலை மறுத்துள்ளார் பிரகாஷ் ராஜ்.
"மோகன்லாலுக்கு எதிராக நான் எப்படி கையெழுத்து போடுவேன்.. அவர் ஒரு லெஜண்ட்.. நம் நாட்டின் சொத்து.. இப்படி ஒரு விஷயமாக யாரும் என்னிடம் எந்த தொடர்பு கொள்ளவே இல்லை.. அதுமட்டுமல்ல இந்த விழா குறித்தும் எனக்கு தெரியாது" என கூறியுள்ள பிரகாஷ்ராஜ், இந்த விஷயத்தில் தான் எப்போதும் மோகன்லால் பக்கம் தான் என கூறியுள்ளார்.
மோகன்லாலுடன் இணைந்து ஒடியன் என்கிற படத்தில் சமீபத்தில் தான் பிரகாஷ்ராஜ் நடித்து முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.