போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
வளர்ந்து வரும் கன்னட நடிகை அனிஷா அம்புரோஸ். கர்வ்வா, மனமந்தா, படங்களில் நடித்தவர், தற்போது வஞ்சகர் உலகம் படத்தின் மூலம் தமிழுக்கு வந்திருக்கிறார். இதில் அவர் புதுமுகம் சிபி புவனசந்திரன் ஜோடியாக நடித்துள்ளார். குரு சோமசுந்தரம், சாந்தினி தமிழரசன், ஜான் விஜய் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். சாம்.சி.எஸ்.இசை அமைத்திருக்கிறார். ஹெர்ராரா மற்றும் சரவணன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். மனோஜ் பீதா இயக்கி உள்ளார். படத்தில் நடித்திருப்பது பற்றி அனிஷா அம்புரோஸ் கூறியதாவது:
ஸ்கைப் மூலம் எனக்கு ஸ்கிரிப்டை விளக்கினார் இயக்குனர் மனோஜ். கதை மிகவும் சிறப்பாக இருந்தது. செய்தி சேகரிக்கும் போது ஒரு கொடூரமான சூழ்நிலையில் மாட்டிக் கொள்ளும் சம்யுக்தா என்ற பத்திரிகையாளரின் பாத்திரத்தில் நடிக்கிறேன். அதிலிருந்து அவள் மீண்டு வந்தாளா என்பது? என்பது தான் கதை, வஞ்சகர் உலகம் திரைக்கதை ஹைப்பர்லிங்க் பாணியில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே இது ஒரே நேரத்தில் நடக்கும் பல்வேறு கதைகள், அதன் கதாபாத்திரங்களை கொண்ட படமாக உருவாகியிருக்கிறது.
வஞ்சகர் உலகம் ஒரு வழக்கமான கேங்க்ஸ்டர் படம் இல்லை என நான் உறுதியளிக்கிறேன். பல காதல் கதைகள் ஒவ்வொன்றும் அதன் முன்னுரை மற்றும் அணுகுமுறையில் வேறுபடுவது போலவே இதுவும் ஒன்று. கன்னடம், மலையாள திரையுலகம் என்னை ஏற்றுக் கொண்டதை போல தமிழ் திரையுலகமும், ரசிகர்களும் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. என்கிறார் அனிஷா.