போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
நடிகர் ஜெய் அடிக்கடி டிராபிக் போலீஸிடம் சிக்கி வருகிறார். கடந்தாண்டு குடிபோதையில் அதிவேகமாக காரை ஓட்டி, பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதி விபத்து ஏற்படுத்தினார்.
இந்நிலையில், நேற்று இரவு சென்னை, நுங்கம்பாக்கம் சாலையில் அதிக ஒலியுடன் கார் ஒன்று வேகமாக சென்றது. அந்தகாரை டிராபிக் போலீசார் தடுத்து நிறுத்தினர். காரின் உள்ளே ஜெய் இருந்தார். இதுபோன்று அதிக ஒலி எழுப்பும் காரை பயன்படுத்தக்கூடாது என போலீசார் அறிவுறுத்தினர். இதையடுத்து ஜெய், தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தார்.
அதோடு, இனி இதுபோன்ற அதிக ஒலி எழுப்பும் காரில் வராதீர்கள் என ஜெய்யை கொண்டே போலீசார் அறிவுரை வழங்கும்படியான வீடியோ ஒன்றும் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது.
அந்த வீடியோவில் ஜெய் கூறியிருப்பதாவது... இது எனது கார் தான். இந்த காரில் அதிக ஒலி வருகிறது. இதுபோன்ற வாகனத்தை பயன்படுத்தினால் போலீசார் அதை பறிமுதல் செய்வார்கள். எனவே அதிக ஒலி எழுப்பும் காரை யாரும் பயன்படுத்த வேண்டாம். அதிக சத்தத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள், பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். இது எனது தாழ்மையான வேண்டுகோள் என கூறியுள்ளார்.