ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
அதர்வா நடித்த முதல் படமான பாணா காத்தாடியை இயக்கிய பத்ரி வெங்கடேஷ், தற்போது இயக்கியுள்ள படம் செம போத ஆகாதே. இந்த படம் ஜூன் 29-ந்தேதி திரைக்கு வருகிறது. அதர்வாவுடன் மிஸ்தி, அனைகா சோட்டி, கருணாகரன், மனோபாலா, யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கிக்காஸ் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் முதன்முதலாக அதர்வாவே தயாரித்துள்ளார்.
இந்த படத்தின் பிரஸ்மீட் இன்று காலை 11 மணி அளவில் சென்னையில் நடைபெற்றது. அப்போது செம போத ஆகாதே படம் குறித்து அதர்வா பேசும்போது, இதற்கு முன்பு படம் தயாரித்தவர்கள் பட்ட கஷ்டங்களை சொல்வதை கேட்டிருக்கிறேன். அந்த கஷ்டங்களை இப்போது நான் படம் தயாரித்த பிறகுதான் தெரிந்து கொண்டேன். ஒரு படத்தை தயாரித்து வெளியிடுவது சாதாரண விசயமல்ல.
எதிர்காலத்தில் சந்தர்ப்பம் அமையும்போது எனது பேனரில் மற்ற நடிகர்களை வைத்தும் படம் தயாரிப்பேன். படத்தின் தலைப்பு செம போத ஆகாதே என்று இருப்பதால் இது போதை சம்பந்தப்பட்ட படம் என்று நினைக்கிறார்கள். இது போதைக்கு எதிரான படம். அதனால் ஏற்படும் பிரச்சினைகளை சொல்லும் படம். செம போதயில் இருக்கும் ஒருவன் எந்தமாதிரியான பிரச்சினையில் சிக்கிக்கொள்கிறான். அதன் பின்விளைவுகள் அவன் வாழ்க்கையை எப்படி புரட்டிப்போடுகிறது என்பதை சொல்லும் படம்.
அந்த வகையில், சமூகத்துக்கு இது நல்லதொரு மெசேஜ் சொல்லும் படமாக இருக்கும். சீன் பை சீன் சிரித்து மகிழக்கூடிய வகையில், பக்கா கமர்சியலாக இந்த படத்தை இயக்கியிருக்கிறார் பத்ரி வெங்கடேஷ். அவர் சினிமாவைப்பற்றி நிறைய அறிவு கொண்டவர். இந்த படத்திற்கு பிறகு பத்ரி வெங்கடேஷ் பெரிய இயக்குனராகி விடுவார் என்றார் அதர்வா.