ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
படத்துக்கு படம் வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து வரும் மலையாள நடிகர் ஜெயசூர்யா, தற்போது 'ஞான் மேரிக்குட்டி' என்கிற படத்தில் திருநங்கையாக நடித்துள்ளார். இந்தப்படம் நேற்று முன்தினம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப்படத்தின் முதல்நாள் முதல் காட்சியை எர்ணாகுளம் பத்மா தியேட்டரில் 50 திருநங்கைகளுடன் பார்த்து ரசித்தார் ஜெயசூர்யா.
ஜெயசூர்யாவின் கதாபாத்திரம் அடிக்கடி சிவப்பு சேலை அணிந்திருக்கும் என்பதால் இந்த 50 திருநங்கைகளும் சிவப்பு நிற உடையணிந்து இந்த திரைப்படத்தை காண வந்திருந்தனர். படத்தை பார்த்துவிட்டு, "திருநங்கைகள் மீது மக்கள் கொண்டு இருக்கும் தவறான அபிப்ராயம், கண்ணோட்டத்தை இந்த படம் மாறும்.. எங்களை மிகவும் கௌரவப்படுத்தியுள்ளனர்" என திருநங்கைகள் பாராட்டியுள்ளனர்.
சமீபத்தில் நடைபெற்ற இந்தப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கூட திருநங்கைகள் பலர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டு அவர்களில் ஐந்து பேரை மேடையேற்றி டிரைலரை வெளியிட வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.