‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல், தமிழகத்தின் அனைத்துப் பிரச்னைகளுக்காகவும் குரல் கொடுத்து வந்தார். தூத்துக்குடிக்குச் சென்று, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய அவர், காவிரி பிரச்னையில் வித்தியாசமாக எதையாவது செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தார்.
அதற்காக, கர்நாடகத்தின் புதிய முதல்வர் குமாரசாமியை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, காவிரி பிரச்னையை இரு மாநில முதல்வர்களும் அமர்ந்து பேசி தீர்வு காண வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், துவக்கத்தில் இருந்து பிரச்னையை ஆரம்பிக்கச் சொல்வது போல, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று சொல்லி, மொத்த பிரச்னையையும் கமல் குழப்பி விட்டார் என்று, சமூக வலைதளங்களில் பலரும் கமலை வறுத்தெடுத்தனர்.
விளம்பரத்துக்காக இப்படி செய்கிறார் என்றும் கடும் விமர்சனம் கிளம்பியது. இதனால், பொதுப் பிரச்னை குறித்து வேகமாக பேசுவதை குறைத்துக் கொள்ள கமல் முடிவெடுத்துள்ளதாக அவரது கட்சியினர் கூறுகின்றனர்.