ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அடுத்த வாரம் வெளியாக இருக்கும் 'ஞான் மேரிக்குட்டி'என்கிற மலையாள படத்தில் நடிகர் ஜெயசூர்யா திருநங்கை கேரக்டரில் நடித்திருக்கிறார். ஜெயசூர்யாவை வைத்து தொடர்ந்து படங்களை இயக்கிவரும் இயக்குனரான ரஞ்சித் சங்கர் தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப்படத்தில் வெவ்வெறு காட்சிகளில் 32 முறை விதவிதமான சேலைகள் கட்டி நடித்துள்ளார் ஜெயசூர்யா. ஜெயசூர்யாவுக்கு அவரது மனைவி சரிதா தான் சேலை கட்டி பழக்கிவிட்டாராம். ஒருகட்டத்தில் நான்கு நிமிடங்களில் சேலைகட்டி பழகிவிட்ட ஜெயசூர்யா, தனது மனைவியை விட வேகமாக சேலைகட்டி அவரை ஆச்சர்யப்படுத்தினாராம்.
சேலைகட்டி நடித்த அனுபவத்தில் ஜெயசூர்யா கூறும்போது, "ஆண்களிடம் வைக்கும் கோரிக்கை என்னவென்றால் தயவுசெய்து உங்கள் வீட்டுப்பெண்கள் சேலைகட்ட நேரம் எடுத்துக் கொண்டால் அதற்காக அவர்களை கோபித்துக் கொள்ளாதீர்கள்" என வேண்டுகோள் வைக்கிறார்.