‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
விஜய் ஆண்டனி நடித்த 'சலீம்' படத்தை இயக்கியவர் நிர்மல் குமார். இவர், இப்போது 'சதுரங்கவேட்டை-2' படத்தை இயக்கி வருகிறார். அரவிந்த்சாமி, திரிஷா நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் எடிட்டிங் போன்ற போஸ்ட் புரொடக்ஷ்ன் முடிவடைந்து பல மாதங்களாகியும் இன்னும் காப்பி ரெடியாகவில்லை.
'சதுரங்கவேட்டை-2' படத்தின் தயாரிப்பாளரான காமெடி நடிகர் மனோபாலா, ஏற்கனவே அரவிந்த்சாமிக்கு பேசியபடி சம்பளத்தைக் கொடுக்காததினால் அவர் டப்பிங் பேச மறுத்துவிட்டார்.
இந்த பஞ்சாயத்தினால் 'சதுரங்கவேட்டை-2' படம் முடிவடையாமல் இழுத்துக்கொண்டே போனதினால் வெறுத்துப்போன இயக்குநர் நிர்மல் குமார், அடுத்தப் படத்தை இயக்கும் வேலையில் இறங்கிவிட்டார். நிர்மல்குமார் இயக்கும் படத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்திற்கு அரோல் கரோலி இசை அமைக்கிறார்.
2008-ல் தமிழகத்தில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. அதிரடி ஆக்ஷன் படமாக உருவாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவிருக்கிறது.