‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
மறைந்த நடிகை சாவித்திரி வேடத்தில் தற்போது மகாநதி படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷுக்கு அளவற்ற பாராட்டுக்கள் தொடர்ந்து குவிந்து வருகின்றன. இதையடுத்து மற்ற சில நடிகைகளும் இதுபோன்ற சுயசரிதை கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
அந்தவகையில் மலையாள நடிகை ரீமா கல்லிங்கலிடம் அப்படி யாருடைய கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறீர்கள் என கேட்கப்பட்டபோது சற்றும் தயங்கமால் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க விரும்புவதாக கூறியுள்ளார்.
அதுமட்டுமல்ல பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த, நங்கேலி என்கிற புரட்சிப்பெண் கேரக்டரிலும் நடிக்கும் ஆசை ரீமாவுக்கு இருக்கிறதாம்.
புரட்சிகரமான கேரக்டர்களில் தொடர்ந்து நடிக்கும் நடிகை ரீமா கல்லிங்கலிடம் இருந்து இப்படி ஒரு பதில் வந்ததில் ஆச்சர்யம் ஏதும் இல்லை..
தமிழில் பரத் ஜோடியாக யுவன் யுவதி என்ற படத்தில் ரீமா கல்லிங்கல் நடித்திருக்கிறார்.