ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
எங்கேயும் எப்போதும் படத்தில் நாயகனாக நடித்த சர்வானந்தை ஞாபகம் இருக்கிறதா?. அந்தப் படத்திற்குப் பிறகு சேரன் இயக்கிய ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை படத்தில் நடித்தார். அதன் பின் தமிழ்ப் பக்கமே வரவில்லை. கடந்த சில ஆண்டுகளாக வருடத்திற்கு இரண்டு, மூன்று தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார்.
கடந்த ஆண்டு அவர் நடித்து வெளிவந்த தெலுங்குப் படங்களான ஷதாமனம் பவதி, மகானுபாவலு ஆகிய படங்கள் நல்ல வெற்றியைப் பெற்றன. தற்போது பாடி பாடி லேச்சே மனசு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவர் ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில், வாழ்க்கையில் தான் செய்த மிகப் பெரிய தவறு ஒன்றைப் பற்றிக் கூறியுள்ளார். “கோ அன்டே கோட்டி என்ற படத்தைத் தயாரித்தது தான் நான் வாழ்க்கையில் செய்த மிகப் பெரிய தவறு. நடிகராக எனது பயணம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்த்து. ஆனால், அதீத நம்பிக்கையில் நான் சம்பாதித்து வைத்திருந்த மொத்த பணத்தையும் அந்த தயாரிப்பில் இறக்கினேன். அப்படத்தின் தோல்வியால் ஏற்பட்ட நஷ்டத்திலிருந்து நான் மீண்டும் வருவதற்கு 3 ஆண்டுகள் ஆனது,” என உண்மையைப் பேசியிருக்கிறார்.
வளரும் சமயத்தில் சொந்தப் படம் எடுத்து இருப்பதைத் தொலைப்பவர்களுக்கு ஏற்கெனவே பலர் உதாரணமாக இருக்கிறார்கள். சமீபத்திய உதாரணம் சர்வானந்த்.