இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? |
சினிமாவில் என்னை அறிமுகப்படுத்திய என் குருநாதர் பாலசந்தருக்கு நான் என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். அந்த நன்றியை செலுத்த என் வாழ்நாள் போதாது என்று உணர்ச்சி பொங்க கூறியிருககிறார் நடிகர் பிரகாஷ்ராஜ். எப்பேற்பட்ட கதாபாத்திரத்திலும் அசல்ட்டாக நடித்து பெயர் வாங்கும் வல்லமை படைத்தவர் நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என் பன்முகம் கொண்ட பிரகாஷ்ராஜ். டைரக்டர் பாலசந்தரால் டூயட் படம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட அவர் இன்று தேசிய விருது வாங்கும் அளவிற்கு உயர்ந்து இருக்கிறார்.
இந்நிலையில் பிரகாஷ்ராஜூக்கு ஐதராபாத்தில் பாராட்டு விழா நடந்தது. இதில் பிரகாஷ்ராஜூக்கு நடிகர்கள் சி்தார்த் மற்றும் சுனில் ஆகியோர் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர். பின்னர் விழாவில் பேசிய பிரகாஷ்ராஜ், நான் கல்லூரியில் படிக்கும் போது கல்லூரி விழாவில் நடந்த நாடகம் ஒன்றில் நடித்தேன். அப்போது என்னுடைய நடிப்பை பார்த்து பலரும் கைதட்டி பாராட்டினார்கள். அந்த உற்சாகம் என்னை நடிகனாக்கியது. இப்போதும் சினிமாவில் பணம் சம்பாதிக்க நடிக்கவில்லை. பெயர், புகழ் மற்றும் கைத்தட்டலுக்காகவே நடிக்கிறேன். மேலும் இந்த தருணத்தில் என்னை சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய என் குருநாதருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். ஆனால் இந்த நன்றியை சொல்ல என் வாழ்நாள் போதாது. அதேபோல் தெலுங்கில் கிருஷ்ணவம்சி, பூரி ஜெகன்நாத், திரிவிக்ரம், குணசேகர், விநாயக் ஆகியோருக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.