ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாள நடிகர் ஜெயசூர்யாவின் மனைவி சரிதா. இவர், தனது கணவர் நடிக்கும் படங்களில் காஸ்ட்யூம் டிசைனராகவும் பணியாற்றி வருகிறார். அதுமட்டுமல்ல ஆடை வடிவமைப்பு ஸ்டுடியோ ஒன்றையும் நிர்வகித்து வருகிறார்.
கடந்த ஆண்டு 'ஜெயசூர்யா நடித்த 'ஆடு-2' படத்தில் இரண்டு பக்கமும் பயன்படுத்தும் வடிவிலான கருப்பு - சிவப்பு வேட்டியை ஜெயசூர்யவுக்காக உருவாக்கினார் சரிதா. அந்த வேட்டி ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானது.
தற்போது, 'ஞான் மேரிக்குட்டி' என்கிற படத்தில் திருங்கையாக நடித்துள்ள ஜெயசூர்யா, பெரும்பாலான காட்சிகளில் சேலைகட்டித்தான் நடித்துள்ளாராம். இதிலும் அவரது மனைவி சரிதா தான் படம் முழுக்க இவருக்கு சேலை கட்டிவிட்டுள்ளாராம்.
இதில் புத்திசாலித்தனமாக தனது கணவர் சேலை அணிந்து காட்சியளிக்கும் புகைப்படங்களை விளம்பர ஹோர்டிங்குகளாக மாற்றி, நகரத்தின் முக்கிய பகுதிகளில் வைத்து தனது புடவை கலெக்சனுக்கு விளம்பரம் தேடி வருகிறார் சரிதா.