போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு 'நடிகையர் திலகம்' என்கிற பெயரில் தமிழில் நேற்று வெளியானது.. சாவித்திரியாக கீர்த்தி சுரேஷும் ஜெமினி கணேசனாக துல்கர் சல்மானும் நடித்துள்ளனர்.. இந்தப்படத்திற்கு சிரஞ்சீவி, மோகன்லால், ராஜமவுலி உள்ளிட்ட பல பிரபலங்களிடம் இருந்தும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.
குறிப்பாக சாவித்திரியாக நடித்த கீர்த்தி சுரேஷ் அந்த கதாபாத்திரத்திற்கு பெருமை சேர்க்கும்படியாக நடித்துள்ளார் என பலரும் குறிப்பிட்டுள்ளனர்.. இந்தநிலையில் நடிகர் கமலை சந்தித்து வாழ்த்தும், பாராட்டும் பெற்றுள்ளார் கீர்த்தி சுரேஷ். கீர்த்தி சுரேஷை மற்றவர்கள் பாராட்டியதைவிட விட கமல் பாராட்டியது ரொம்பவே முக்கியத்துவம் பெறுகிறது..
காரணம், 1960-களில் தான் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான 'களத்தூர் கண்ணம்மா' படத்திலேயே சாவித்திரியின் மகனாக நடித்தவர் தான் கமல். அதனாலேயே சாவித்திரி, ஜெமினி இருவர் மீதும் தீராத அன்பு கொண்டவர். மேலும் பார்த்தால் பசிதீரும், பாதகாணிக்கை ஆகிய படங்களிலும் சாவித்திரியுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.