ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
கடந்த, 1990களில், பாலிவுட்டை கலக்கியவர், மாதுரி தீட்ஷித். இவரது நடனத்தை பார்ப்பதற்காகவே, தியேட்டர்கள் முன், ரசிகர்கள் தவம் கிடந்த காலம் எல்லாம் உண்டு. திருமணம் முடிந்ததும், வெளிநாட்டில் குடும்பத்துடன் செட்டிலான மாதுரி, தற்போது, மீண்டும் நடிக்கத் துவங்கியுள்ளார்.
அதுவும், அவர், ஏற்கனவே ஜோடி சேர்ந்து நடித்த, அனில் கபூர், சஞ்சய் தத் ஆகியோருடன் மீண்டும் நடிக்கிறார். சஞ்சய் தத்துடன் அவர் நடித்த கல்நாயக் படம், மிகப் பெரிய வெற்றி பெற்றது. அதேபோல், அனில் கபூருடனும் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். இப்போது, சஞ்சய்
தத்துடன், கலாங்க் என்ற படத்திலும், அனில் கபூருடன், டோட்டல் தமால் ஆகிய படத்திலும் நடித்து வருகிறார்.
'என் பழைய ஹீரோக்களுடன் மீண்டும் நடிப்பது, இனிமையான அனுபவமாக உள்ளது. ஏற்கனவே நாங்கள் நடித்தபோது ஏற்பட்ட அனுபவம் எல்லாம், ஒரு கனாக்காலம். பாலிவுட்டில் பல மாற்றங்கள் ஏற்பட்டாலும், நடிகர்கள், அதே நட்புடன் தான் பழகுகின்றனர்' என்கிறார், மாதுரி.