‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
விஷால், சமந்தா, அர்ஜூன் நடித்த இரும்புத்திரை படம் நாளை வெளிவருகிறது. இந்தப் படத்தின் முதல் பாதியை (இடைவேளை வரை) ஹாலிவுட் பாணியில் மீடியாக்களுக்கு போட்டு காட்டினார்கள். அதன் பிறகு படத்தின் இயக்குனர் பி.எஸ்.மித்ரன் நிருபர்களிடம் கூறியதாவது:
எப்போதும் புதுமையை விரும்புபவர் விஷால். அவர் தன்னுடைய ஏதாவது ஒரு படத்தின் முதல் பாதியை செய்தியாளர்களுக்கு திரையிட்டு கருத்து கேட்க வேண்டும் என்று நினைத்து வந்தார். அது இரும்புத்திரை படத்துக்கு நடந்துள்ளது. இரும்புத்திரை ஆதாரினால் ஏற்படும் ஆபத்தை பற்றி பேசும் படம் அல்ல, டிஜிட்டல் இந்தியாவின் இன்னொரு முகத்தை காட்டும் படமாக இருக்கும்.
படத்தை பார்க்காமல் படத்தில் என்ன இருக்கிறது என்று தெரியாமலேயே சிலர் வழக்கு போடுகிறார்கள். இவர்களின் நோக்கம் என்ன என்று தெரியவில்லை. இரும்புத்திரைக்கு தணிக்கை குழு அனுமதி அளித்துள்ளது. வெளியிட எல்லா உரிமையும் இருக்கிறது. இந்தப் படம் சில உண்மைகளை எடுத்துக்கூறி மக்களை விழிப்படையச் செய்யும். எனது 5 வருட போராட்டம் இந்தப் படம். என்றார்.