‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
நடிகர் ரஜினி, கட்சித் துவங்கும் முன்பாக, தன்னுடைய ரசிகர் மன்றத்தை, நற்பணி மன்றமாக பெயர் பதிவு செய்தார். அந்த மன்றமே, ரஜினியின் புதிய கட்சிக்கான அடிப்படையாக செயல்படும் என்று நினைத்தே, ரஜினி, அதன் வழியில் செல்கிறார்.
அந்த ரசிகர் மன்றத்துக்கான மாவட்ட நிர்வாகிகளை தொடர்ந்து நியமித்து வருகிறார். ஆனால், அந்த நிர்வாகிகளில் பலர் மீது, நிறைய புகார்கள் இருப்பதால், அவர்கள் மீதெல்லாம் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருக்கிறார் ரஜினி. அவர்களில் சிலர் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ரசிகர் மன்ற நிவாகிகள் மீது வரும் புகார்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கவும் கட்சியின் சிலரை புதிய நிர்வாகிகளாக நியமித்திருக்கிறார் ரஜினி. அதாவது, ஒழுங்கு நடவடிக்கைக் குழு. மன்ற நலனுக்கு எதிராக செயல்படும் நிர்வாகிகளை அடையாளம் கண்டு சரிபண்ண பார்க்கலாம். முடியவில்லை என்றால், அவர்களை கட்சியில் இருந்தே கூட விரைவில் நீக்கி விடலாம் என ரஜினி கூறியதாக மன்றத்து மூத்த நிர்வாகி ஒருவர் கூறினார்.