‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
சமீபத்தில் வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தியுள்ள இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தில் காமவெறி பிடித்த பேயாக நடித்திருந்தவர் சந்திரிகா ரவி. அந்தப் படத்திற்கு பிறகு கவர்ச்சி வேடங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
ஆஸ்திரிலியாவில் பிறந்து வளர்ந்தவர் சந்திரிகா ரவி. மிஸ் வேர்ல்ட் ஆஸ்திரிலேயாவில் டைட்டில் வென்றவர் மாடலிங் துறையில் நுழைந்தார். நியூயார்க் பிலிம் அகாடமியில் நடிப்பு நடனத்தை முறைப்படி கற்றவர். மேற்கத்திய நடனத்துடன் பரநாட்டியமும் கற்றிருக்கிறார்.
செய் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானர். அதன் பிறகு நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து அவருக்கு கவர்ச்சி அடையாளத்தை கொடுத்துள்ளது.
தற்போது தமிழ், மலையாளத்தில் தயாராகி வரும் உன் காதல் இருந்தால் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்தப் படத்தில் கஸ்தூரி, மக்பூல் சல்மான், லீனா, ஆர்த்தி நாக்பால் உள்பட பலர் நடிக்கிறார்கள். கிளாமரை மையமாக கொண்டு பல படங்கள் தயாராவதால் அதில் நடிக்க சந்திரிகா ரவிக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. கவர்ச்சியும் இருக்க வேண்டும், கதையும் இருக்க வேண்டும் என்று கவனமாக படங்களை தேர்வு செய்து வருகிறார் சந்திரிகா ரவி.