‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
அட்டக்கத்தி படத்தின் மூலம் அறிமுகமானவர்கள் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் நந்திதா ஸ்வேதா. இருவருமே தற்போது மீடியம் பட்ஜெட் படங்களின் நாயகிகளாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கா முட்டை படத்தில் இரண்டு சிறுவர்களுக்கு அம்மாவாக நடித்து பெரும் பாராட்டை பெற்றார். பல விருதுகளையும் பெற்றார்.
தற்போது நந்திதாவும் 7 வயது சிறுவனுக்கு அம்மாவாக நடிக்கிறார். எதிர்நீச்சல், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, 5ம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி, சமீபத்தில் வெளிவந்த காத்திருப்போர் பட்டியல் படங்களில் நடித்த ஸ்வேதா நர்மதாவில் அம்மாவாக நடிக்கிறார்.
ஜி.ஆர்., மூவி மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாராகும் முதல் திரைப்படம் 'நர்மதா'. நந்திதா ஸ்வேதாவுடன் விஜய் வசந்த், எம்எஸ் பாஸ்கர், சந்தோஷ் பிரதாப், புதுமுகம் அருண் தீபக், மாஸ்டர் ரெனீஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள். சதீஸ் சரண் ஒளிப்பதிவு செய்கிறார். பல குறும்படங்களை இயக்கிக கீதா ராஜ்புத் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது:
உணர்வுபூர்வமான குடும்ப திரைப்படம் இது. தாய்க்கும், மகனுக்கும் உள்ள பாசபிணைப்பை நெகிழ்ச்சியான பயணத்தின் பின்னணியில் சொல்கிறேன். இதில் கதையின் நாயகியாக நடித்திருக்கும் நந்திதா ஸ்வேதா, 7 வயது சிறுவனுக்கு தாயாக நடிக்கிறார். கதையின் நாயகனாக நடிக்கும் விஜய் வசந்த் இதுவரை திரையில் பார்த்திராத புதிய கேரக்டரில் நடிக்கிறார். இந்த படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்க முன்னணி நடிகர் ஒருவருடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.
நாகர்கோயிலில் இப்படத்திற்காக பிரம்மாண்டமான முறையில் இயற்கை வளத்துடன் கூடிய திறந்த வெளி அரங்கம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. படத்தின் படபிடிப்பை மே மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்க திட்டமிட்டு வருகிறோம். என்றார்.