‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ஆர்.கே.செல்வமணி இயக்கிய புலன்விசாரணை படத்தில் நாயகனாக நடித்தவர் விஜயகாந்த். இந்த படத்தில் நடிகர் சரத்குமார் வில்லனாக நடித்தார். இந்த படத்தின் கிளைமாக்ஸ் சண்டை காட்சி பிரமாண்டமாக படமாக்கப்பட்டது. அதனால் வில்லனாக நடித்திருந்த சரத்குமார் கவனிக்கப்படும் நடிகரானார்.
அதன்பிறகும் சில படங்களில் வில்லனாக நடித்தவர் அதையடுத்து குறுகிய காலத்தில் ஹீரோவாகி விட்டார் சரத்குமார். அந்த சமயத்தில் உள்ள ஹீரோக்களுக்கு போட்டி நடிகராக வளர்ந்து வந்தார். ஆனால் பின்னர் எந்த படத்திலும் வில்லனாக நடிக்காத அவர், தற்போது தெலுங்கில் அல்லு அர்ஜூன் நாயகனாக நடித்துள்ள என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா என்ற படத்தில் மீண்டும் வில்லனாக நடித்துள்ளார்.
ராணுவ வீரரின் கதையில் உருவாகியுள்ள இந்த படத்திலும் அல்லு அர்ஜூன், சரத்குமார் சம்பந்தப்பட்ட சண்டை காட்சி பிரமாண்டமாக படமாக்கப் பட்டிருக்கிறதாம்.