‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. இதுதொடர்பாக நாடு முழுவதும் கண்டன குரல்கள் எழுவதோடு, பாலியல் தொடர்பான குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை, வள்ளுவர்கோட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் விஷால் பங்கேற்றார்.
அவர் பேசும்போது, குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றச்செயல்களில் ஈடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இதை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கு பள்ளியிலேயே தற்காப்பு கலைகள் தொடர்பான பயிற்சிகள் அளிக்க வேண்டும் என்றார்.