ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் புகழ்பெற்றவர் ஷாலினி பாண்டே. இப்போது தமிழில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக 100 சதவிகித காதல் படத்திலும், ஜீவா ஜோடியாக கொரில்லா படத்திலும் நடித்து வருகிறார். இதுதவிர இன்னும் சில படங்களில் நடிக்க இருக்கிறார். இந்த நிலையில் தனக்கு கிராமத்து பெண் கேரக்டரில் நடிக்க ஆர்வம் இருப்பதாக கூறியிருக்கிறார். அவர் மேலும் கூறியிருப்பதாவது:
தமிழ் கலாச்சாரம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அதிலும் குறிப்பாக கிராமத்து வாழ்க்கை. தற்போது, நான் நடித்து வரும் படங்கள் நகரத்து வாழ்க்கை தொடர்பானது. தமிழ்நாட்டு கிராமத்து பெண்ணாக பாவாடை, தாவணி, சேலை அணிந்து நடிக்க ஆசையாக இருக்கிறது. அது தொடர்பான கதை வந்தால் உடனே ஒப்புக் கொள்வேன்.
இவ்வாறு கூறியிருக்கிறார் ஷாலினி பாண்டே.