ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தெலுங்கு தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் மீது அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அவருக்கு ஆதரவாக பல நடிகைகளும், பெண்கள் அமைப்பினரும் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த ஸ்ரீரெட்டி, "நடிகர் பவன் கல்யாண் பாலியல் புகார்களை பொது இடங்களில் சொல்ல வேண்டாம். போலீசில் புகார் செய்யலாம் என்றார். அவரது அறிவுரைக்கு நன்றி. அவரை அண்ணாக நினைத்தேன். அதற்காக என்னை நானே செருப்பால் அடித்துக் கொள்கிறேன்" என்றார். இப்படிச் சொன்னதோடு தன்னை தானே செருப்பாலும் அடித்துக் கொண்டார்.
இதற்கு பவன் கல்யாணின் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஸ்ரீரெட்டிக்கு எதிராக கருத்து கூறி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று நடிகை மாதவி லதா தலைமையில் பவன் கல்யாண் ரசிகர்கள் ஐதராபாத்தில் உள்ள தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை முன் ஸ்ரீரெட்டிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தார்கள். ஸ்ரீரெட்டிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். போலீசார் விரைந்து வந்து அவர்களை கலைந்து செல்ல சொன்னார்கள். அவர்கள் மறுத்ததால் மாதவி லதா மற்றும் பவன் கல்யாண் ரசிகர்களை கைது செய்தனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.