ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
டிஜிட்டல் கட்டண குறைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திரைத்துறையினர் 45 நாட்களுக்கும் மேலாக ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.
இதை முடிவுக்கு கொண்டு வர அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில், தியேட்டர் அதிபர்கள், டிஜிட்டல் நிறுவன நிர்வாகிகள் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தினர் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. இதில் பல விஷயங்கள் ஆராயப்பட்டன. சில காரசாரமான விவாதங்களும் நடந்தன. இறுதியில் ஒரு சுமூக உடன் பாடு ஏற்பட்டது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, முத்தரப்பு பேச்சு வார்த்தையில் சுமூகமான உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஸ்டிரைக் உடனடியாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. புதிய படங்கள் ரிலீஸாவது இரண்டு நாளில் முடிவாகும். இனி படப்பிடிப்பு, அதை சார்ந்த விஷயங்கள் அனைத்து நடைபெறும் என்றார்.