ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
திரையுலகத்தில் நடிப்பதற்காக வாய்ப்பு கேட்டு வரும் பெண்களிடம் பாலியல் ரீதியாக தவறாக அணுகுபவர்கள் மீதான குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. ஆங்கிலத்தில் 'கேஸ்டிங் கௌச்' என அழைக்கப்படும் இந்த விவகாரத்தால் தெலுங்குத் திரையுலகம் தற்போது ஆட்டம் காண ஆரம்பித்திருக்கிறது.
நடிகை ஸ்ரீரெட்டி, தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்கள் என குற்றம் சாட்டி சில புகைப்படங்களை வெளியிட்டார், தனது ஆடைகளைக் களைந்து போராட்டம் நடத்தினார். அவருக்கு எதிராகத் தடை விதித்த தெலுங்கு நடிகர்கள் சங்கம் உடனடியாக அந்தத் தடையை நீக்கியது. மனித உரிமை கமிஷன் அதில் தலையிட்டதும் காரணமாக அமைந்தது.
இதனிடையே, கடந்த சில நாட்களாக சில முன்னணி டாப் நடிகர்கள் மீதும் பலவிதமான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பெரிய நட்சத்திரக் குடும்பத்து கடைசி தம்பி, போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகர் என சில பெண்கள் அவர்கள் மீது குற்றம் சுமத்தியுள்ளார்கள். இந்த பட்டியல் இன்னும் அதிகமாகும் என டோலிவுட் வட்டாரம் மிரண்டு போய்க் கிடக்கிறதாம். இவற்றையெல்லாம் எப்படி தடுத்து நிறுத்துவது என பலரும் குழம்பிப் போயிருக்கிறார்களாம்.
அடிக்கும் வெயிலை விட இந்த விவகாரம் தான் மிகவும் 'ஹாட்' ஆக இருக்கிறது என்கிறார்கள்.