எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா |
காவிரி பிரச்னை தொடர்பான போராட்டங்கள் தமிழ்நாட்டிலும், கர்நாடகாவிலும் நடந்துவரும் நிலையில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவரான நடிகர் பிரகாஷ்ராஜ், காவிரி பிரச்னை தீர எந்த அரசியல் கட்சியும் விரும்பவில்லை என தெரிவித்திருக்கிறார். கர்நாடக மாநிலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரகாஷ்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:
நைல் நதி நீரை 4 நாடுகள் சுமுகமாக பங்கிட்டு கொள்கின்றன. நாடுகளுக்கு இடையேயான நதி நீர் பிரச்னைகள் தீரும்போது இரு மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் பிரச்னையை தீர்க்க முடியாதா? ஒரே ஒரு பேச்சு வார்த்தையில் தீர்க்க முடியும். அரசியல் தைரியம் இருந்தால் தீர்க்கலாம். ஆனால் அதற்கு யாரும் தயாராக இல்லை. இதற்கான நடவடிக்கைகளை எந்த அரசோ, கட்சியோ, தலைவர்களோ எடுக்கவில்லை. காரணம் காவிரி பிரச்னை தீராமல் அதனை உயிரோடு வைத்திருக்கவே அரசியல் கட்சிகள் விரும்புகின்றன என்றார்.