‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
திரையரங்குகளில் படங்களை திரையிட பயன்படுத்தும் கியூப் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று திரையுலகினர் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள். படப்பிடிப்புகள், புதிய பட வெளியீடுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர்கள், டிஜிட்டல் நிறுவனங்கள், தியேட்டர்களிடையே நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. மீண்டும் முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் தியேட்டர்களில் குறைந்த கட்டணத்தில்... அதாவது தற்போது வசூலிக்கப்படும் கட்டணத்திலிருந்து 50 சதவிகிதம் குறைவான கட்டணத்துடன் நாங்கள் படத்தை திரையிடுகிறோம் என்று ஏரோக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் ஏரோஸ் நிறுவன அதிகாரிகளும், தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளும் நேற்று கையெழுத்திட்டனர். இந்த நிறுவனத்தை தொடர்ந்து மேலும் சில புதிய நிறுவனங்களுடன் விரைவில் கையெழுத்தாக இருக்கிறது. இதனால் பழைய நிறுவனங்களை ஓரங்கட்டிவிட்டு புதிய நிறுவனங்களுடன் பயணிக்க தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. இதனால் வேலை நிறுத்தத்தை விலக்கி கொள்வதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்திருக்கிறது.