ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் அவருடைய கணவர் தனுஷ் ஹீரோவாக நடித்த '3' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசை அமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத்.
ஐஸ்வர்யாவின் உறவினர் என்பதால் அனிருத்துக்கு 3 படத்தை தொடர்ந்து 'வேலையில்லா பட்டதாரி', 'மாரி' 'தங்கமகன்' ஆகிய திரைப்படங்களுக்கு இசை அமைக்கும் வாய்ப்பு கொடுத்தார் அனிருத். அதுமட்டுமல்ல தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த 'எதிர்நீச்சல்', 'காக்கிச் சட்டை', விஜய் சேதுபதி நடித்த 'நானும் ரௌடிதான்' முதலான படங்களுக்கும் அனிருத்தையே இசை அமைக்க வைத்தார்.
தங்கமகன் படத்துக்கு இசையமைத்தபோது அனிருத் குறிப்பிட்ட தேதியில் பாடல்களை தராமல் இழுத்தடித்த காரணத்தால் தொடர்ந்து இவர்கள் இருவரும் எந்தப்படத்திலும் இணையவில்லை. இதை வைத்து தனுஷ், அனிருத் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் பெரியஅளவில் ஏற்பட்டது. அதனால்தான் சமீபகாலமாக தனுஷ் அனிருத் இருவரும் இணைந்து படங்கள் பண்ணவில்லை.
இதற்கு விளக்கம் தராமல் இதுநாள்வரை அமைதிகாத்து வந்த அனிருத் சமீபத்தில் எனக்கும், தனுஷுக்கும் இடையில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை! மிக விரைவிலேயே, அதாவது 2019-ல் நாங்கள் இருவரும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றவிருக்கிறோம்' என்று கூறியுள்ளார்.
இது உண்மையான தகவலா? பேட்டிக்காக சும்மா அடித்துவிட்ட பொய்யா என்பது விரைவில் வெட்ட வெளிச்சமாகும்.