ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
வருஷம் 16, மைடியர் குட்டிச்சாத்தான் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 200 படங்களுக்கு மேல் எடிட்டராக பணியாற்றிய சேகர் (வயது 81) மாரடைப்பால் காலமானார்.
1980களில் பிரபல எடிட்டராக இருந்த சேகர், 'பூவே பூச்சூடவா', 'வருஷம் 16' 'பூவிழி வாசலிலே', 'அரங்கேற்ற வேலை', 'காதலுக்கு மரியாதை' உட்பட பல வெற்றிப் படங்களில் எடிட்டராக பணிபுரிந்துள்ளார். கடைசியாக சித்திக் இயக்கிய சாதுமிரண்டா படத்திற்கு எடிட்டராக பணிபுரிந்தார்.
இயக்குநர்கள் பாசில், சித்திக்கின் ஆஸ்தான எடிட்டராக திகழ்ந்தவர் இவர். இந்தியாவின் முதல் 3டி படமான மைடியர் குட்டிச்சாத்தான், தென்னிந்திய சினிமாவின் முதல் சினிமாஸ்கோப் படமான 'தச்சோலி அம்பு', முதல் 70 எம்.எம். படமான 'தடையோட்டம்' போன்ற படங்களுக்கு இவர் தான் எடிட்டராக பணிபுரிந்திருக்கிறார். வருஷம் 16 படத்திற்காக தமிழக அரசின் விருது பெற்றுள்ளார்.
சினிமாவிலலிருந்து ஓய்வு பெற்ற பிறகு சொந்த ஊரான திருச்சி அருகே உள்ள தென்னூரில் வசித்து வந்த சேகருக்கு இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன்றி அவரது உயிர் பிரிந்தது.
சேகருக்கு சுந்தரின என்ற மனைவியும், தீபலட்சுமி, திலகவதி, நித்யா என மூன்று பெண் பிள்ளைகளும் உள்ளனர். இறுதிச்சடங்கு இன்று(மார்ச் 22) மாலையில் நடக்கிறது.