‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தமிழ்த் திரையுலகத்தில் நடந்து கொண்டிருப்பது வேலை நிறுத்தமல்ல, சில திருத்தங்களைச் செய்ய நடக்கும் சீர்திருத்தம் என தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தெரிவித்தார். டிஜிட்டல் சேவை நிறுவனங்களுக்கு எதிராக தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடி வருகின்றனர்.
ஆனால், திரையரங்கு உரிமையாளர்கள் பலர் டிஜிட்டல் சேவை நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு நடக்கும் ஸ்டிரைக்கை சீர்குலைக்க முடிவு செய்து, சில தயாரிப்பாளர்களைத் தூண்டி விடுகிறார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது. சில சீனியர், முன்னணி தயாரிப்பாளர்கள், தயாரிப்பாளர் சங்க கூட்டத்திலேயே ஸ்டிரைக் வேண்டாமென பேசியிருக்கிறார்கள்.
அவர்களில் கமல்ஹாசன் படப் பெயரில் தற்போது தயாராகி முடிந்துள்ள பட நாயகனின் தயாரிப்பாளர் அப்பா, தமிழ் சினிமாவில் எந்தப் பிரச்சினையிலும் தலையிடாத முன்னணி நடிகரை வைத்து அடுத்த படத்தைத் தயாரிக்க உள்ள தயாரிப்பாளர், விஷால் எது செய்தாலும் அதை எதிர்க்க வேண்டும் என செயல்படும் முன்னாள் நிர்வாகி ஆகியோரை வைத்து ஊர் பெயருடன் பெயர் வைத்திருக்கும் தியேட்டர் உரிமையாளர் தூண்டி வருகிறாராம்.
அவர் சொல்லித்தான் ரஜினிகாந்த்தும் 'காலா' படம் தள்ளிப் போகிறதே என்ற கோபத்தில் ஸ்டிரைக்கிற்கு எதிராகப் பேசினாராம்.
கண்ணாடி வீட்டிற்குள் இருந்தே கல் எறிபவர்கள் இருப்பதால்தான் தமிழ் சினிமா இன்னும் தரம் தாழ்ந்து போய்க் கொண்டிருக்கிறது என உண்மையிலேயே படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் பலர் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது அனைத்திற்கு டிஜிட்டல் சேவை நிறுவனம் ஒன்றுதான் பின்னணியில் இருக்கிறது என்கிறார்கள்.