போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
விஷால் நடித்த துப்பறிவாளன் படத்தை இயக்கிய மிஷ்கின், அதன்பிறகு தனது தம்பி ஆதித்யா இயக்கிய சவரக்கத்தி படத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து தற்போது தனது புதிய படத்தை இயக்கும் வேலைகளை தொடங்கியிருக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை லிப்ரா புரொடக்சன்ஸ் தயாரிக்கிறது. சாந்தனு நாயகனாக நடிக்கிறார்.
இந்த படத்தில் நாயகியாக நடிப்பது குறித்து இன்னும் மிஷ்கின் எந்த தகவலும் வெளியிடவில்லை. ஆனால் நித்யாமேனன், சாய் பல்லவி ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
விஜய்யின் மெர்சல் படத்திற்கு பிறகு அவே தெலுங்கு படத்தில் நடித்த நித்யாமேனன், இந்த படத்திலும் ஒரு அழுத்தமான வேடத்தில் நடிக்கிறாராம்.
அதேபோல் கரு படத்தில் குழந்தைக்கு அம்மாவாக நடித்துள்ள சாய் பல்லவியும் இன்னொரு முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம்.