ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கடந்த மாதம் மலையாளத்தில் வெளியான 'மாணிக்ய மலராய பூவி' என்கிற ஒரு பாடலில், புருவம் உயர்த்தி, கண்களை சிமிட்டி சில சமிக்ஞைகள் செய்ததன் மூலம் திடீரென புகழ் வெளிச்சம் பெற்றவர் தான் புருவ அழகி எனப்படும் பிரியா பிரகாஷ் வாரியர். இதை தொடர்ந்து இவரை பேஸ்புக் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை பல லட்சங்களை தொட்டது..
ஆனால் இதில் ஆச்சர்யம் என்னவென்றால், அவர் மொபைல்போன் பயன்படுத்துவதற்கு அவரது தந்தை தடைவிதித்துள்ளாராம். பிரியாவின் கைவசம் தற்போது ஒரு செல்போன் இருந்தாலும் கூட, அதில் சிம் கார்டு இல்லாததால் யாருடனும் போனில் பேசவும் முடியாதாம். இந்த தகவலை பிரியாவின் தந்தையே தெரிவித்துள்ளார் என்பதுதான் ஹைலைட்.
தற்போது தனது அம்மாவின் செல்போனை பயன்படுத்தித்தான் தனது நட்பு வட்டாரத்தில் பேசி வருகிறாராம் இந்த புருவ அழகி. அதிலும் இன்டர்நெட் பயன்படுத்த வேண்டும் என்றால் கூட, எங்கே வைபை இணைப்பு கிடைக்கிறதோ அந்த இடத்தில் மட்டும் பயன்படுத்திக்கொள்ள அவரது தந்தை அனுமதித்துள்ளாராம்.