ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
தமிழ்த் திரையுலகத்தில் இதுவரை எத்தனையோ போராட்டங்கள், வேலை நிறுத்தங்கள் நடைபெற்றுள்ளன. ஆனால், இந்த முறை நடக்கும் வேலை நிறுத்தம் மிகவும் கடுமையாகவே இருக்கிறது. பொதுவாக, இப்படி ஏதாவது அறிவிக்கப்பட்டால் அதை சீர்குலைப்பதற்கென்றே சிலர் உள்ளடி வேலைகளைப் பார்ப்பார்கள். ஆனால், தயாரிப்பாளர் சங்கத்தின் உறுதி காரணமாக அந்த உள்ளடி வேலைகள் இந்த முறை நடக்கவில்லை.
விஷாலை எதிர்த்து போட்டியிட்ட மூத்த தயாரிப்பாளர்கள் கூட இந்த முறை விஷாலுக்குக் கைகொடுக்க வந்தது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. திரைப்படத் தொழிலில் கடன் வாங்கி வட்டி கட்டி பணத்தை முதலீடு செய்பவர்கள் தயாரிப்பாளர்கள் தான். ஆனால், அவர்கள் ஒரு படம் எடுத்து முடிப்பதற்குள் நடிகர்கள், நடிகைகள், வினியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் இப்படி பலரது கெடுபிடிகளுக்குள் சிக்கி, சின்னாபின்னமாகித்தான் படத்தை வெளியிட வேண்டியிருக்கிறது.
பணத்தை முதலீடு செய்யும் தயாரிப்பாளர்கள் அவர்களது படங்களை விற்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பக்கம் பைரசி, மற்றொரு புறம் டிஜிட்டல் கட்டணங்கள் ஆகியவையும் தயாரிப்பாளர்களுக்கு தற்போது சுமையை அதிகரித்துள்ளன. இந்த வேலை நிறுத்த சமயத்தில் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வைக் கொண்டு வந்துவிட வேண்டுமென்று தயாரிப்பாளர் சங்கம் உறுதியாக இருக்கிறதாம்.
அதற்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளதால், நடிகர்களின் சம்பளம் முதல் கொண்டு பைரசி வரை ஒரு தீர்வை கொண்டு வராமல் விடப் போவதில்லை என உறுதியாக இருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். எப்படியாவது தமிழ் சினிமாவுக்கு ஒரு மறுமலர்ச்சியைக் கொண்டு வந்துவிட வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் கடுமையான நடவடிக்கைகளுக்குத் தயாராகி வருகிறார்களாம்.