போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
சினிமா, அரசியல் சம்பந்தப்பட்ட துறைகள் சார்ந்த முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன்பு இமயமலையில் உள்ள பாபாஜியை தரிசித்து விட்டு வந்து முடிவெடுப்பது ரஜினியின் நீண்டகால பாலிஸியாக இருந்து வருகிறது. அந்த வகையில், விரைவில் தனது புதிய கட்சி குறித்த அறிவிப்பினை வெளியிடும் ரஜினி, முன்னதாக நேற்று இமயமலைக்கு புறப்பட்டு சென்றார்.
அப்போது அவரை விமான நிலையத்தில் மீடியாவினர் முற்றுகையிட்டு கேள்விகள் எழுப்பினர். அப்போது ரஜினி, தான் இமயமலைக்கு பாபாஜியை தரிசிக்க செல்வதாக சொன்னார். அதைத் தொடர்ந்து தமிழகத்தில் பெண்களுக்கு நிலவி வரும் பாதுகாப்பற்ற சூழல், சட்டம் ஒழுங்கு குறித்து அவரிடம் மீடியாக்கள் கேள்விகள் எழுப்பினர்.
ஆனால் அதற்கு ரஜினி பதில் சொல்ல விரும்பாமல் இப்போது எதுவும் வேண்டாம். நான் இமய மலைக்கு சென்று கொண்டிருக்கிறேன். அப்புறம் பார்க்கலாம். வணக்கம் என்று சொல்லிவிட்டு வேகமாக புறப்பட்டுச்சென்று விட்டார்.