‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
சிம்பு என்றாலே வம்புதான் என்பார்கள். அவரை வைத்து ஒரு படம் இயக்குவதற்குள் போதும் போதும் என்றாகி விடும் என்று அவரை வைத்து படம் இயக்கியவர்கள் சலிப்புடன் கூறி வந்தனர்.
ஆதிக்ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்த, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் தோற்றுப்போனதற்கு காரணமே சிம்பு தான் என்றார்கள். அவர் ஒருநாள்கூட ஒழுங்காக படப்பிடிப்புக்கு வந்ததில்லை என்று குற்றம் சாட்டி, அவரிடத்தில் ரூ.18 கோடி நஷ்ட ஈடு கேட்டார் அந்த படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன். அதையடுத்து சிம்புவிற்கு ரெட் கார்டு போடும் நிலையும் உருவானது.
இந்த சூழ்நிலையில், தற்போது மணிரத்னம் இயக்கி வரும் செக்கச்சிவந்த வானம் படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இதுநாள் வரை படப்பிடிப்பு 9 மணிக்கு என்றால் மதியத்திற்கு பிறகுதான் ஸ்பாட்டில் சிம்பு தலைகாட்டுவார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், இந்த படத்தில் 9 மணி என்றால் அதற்கு முன்பே சென்று மேக்கப்போட்டு தயாராகி விடுகிறாராம் சிம்பு. இதனால் படக்குழுவே அவரை ஆச்சர்யத்துடன் பார்க்கிறதாம்.