போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் லிங்குசாமி இயக்கத்தில், தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் தமிழில் நாயகனாக அறிமுகமாகும் படத்தின் துவக்க விழா, 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது. தமிழில் நேரடியாக அறிமுகமாக வேண்டும் என்பதற்காகத்தான் தனது படங்களை தமிழில் டப்பிங் செய்து வெளியிடக் கூட அனுமதிக்கவில்லை என அப்போது கூறியிருந்தார்.
2017ம் ஆண்டு துவக்கத்திலேயே அந்தப் படம் ஆரம்பமாகும் என்றார்கள். ஆனால், ஒன்றரை வருடங்கள் ஆகியும் அந்தப் படம் ஆரம்பிப்பது போலத் தெரியவில்லை. அல்லு அர்ஜுனின் முதல் தமிழ்ப் பட இயக்குனராக அறிவிக்கப்பட்ட லிங்குசாமி 'சண்டக்கோழி 2' படத்தை இயக்கப் போய்விட்டார்.
படத்தைத் தயாரிப்பதாக அறிவித்த ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் நேற்று, தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொன்டா நடிக்கும் ஒரு படத்தை தமிழ், தெலுங்கில் ஆரம்பித்துவிட்டார்கள். இதனால், அல்லு அர்ஜுன் படம் ஏறக்குறைய 'டிராப்' செய்யப்பட்டு விட்டதாகத்தான் சொல்கிறார்கள்.
சென்னையில் பிறந்து, வளர்ந்து இந்த ஊரிலும் சாதிக்க வேண்டும் என்று பேசிய அல்லு அர்ஜுன் ஆசை நிறைவேறுமா, நிறைவேறாதா என்பது தெரியவில்லை.