ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
தமிழ், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பிரபலமான நடிகை அமலாபால். இயக்குநர் விஜய்யை விவாகரத்து செய்த பின்னர் மீண்டும் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
சில தினங்களுக்கு முன்னர் புதுச்சேரியில் நடந்த கண் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்ற அமலாபால், தனது கண்களை தானமாக வழங்கினார். இந்நிலையில் கஷ்டப்படும் மக்களுக்கு உதவ அமலா ஹோம் என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கி உள்ளார் அமலாபால்.
இதுகுறித்து அமலாபால் கூறுகையில், உலகம் முழுவதும் 30 மில்லியன் மக்கள் பார்வை குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள். 70 சதவிகிதம் குணப்படுத்த கூடியவை. இதற்கு பெரும் தடையாக இருப்பது கண் தானம் பற்றிய விழிப்புணர்வு இல்லாதது தான்.
நான் எனது கண்களை தானம் செய்வது மட்டுமில்லாமல், இந்த கண்தான பற்றாக்குறையை நீக்கவும், அறுவை சிகிச்சைகளுக்கு நிதி திரட்டவும் அமலா ஹோம் என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கியுள்ளேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்தால் அனைவருக்கும் கண் பார்வை கிடைக்கும்படி செய்து நமது அழகான, மிக வேகமாக வளர்ந்து வரும் நமது தேசத்தை அவர்களையும் காண வைக்கலாம்.
இவ்வாறு அமலாபால் கூறியுள்ளார்.