தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் |
கபாலி படத்தால் ஏற்பட்ட நஷ்டத் தொகையை தராமல் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு இழுத்தடிப்பதாக சினிமா விநியோகஸ்தர் செல்வக்குமார் என்பவர் புகார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித் செல்வகுமார் கூறியதாவது.... தென் ஆர்காடு மற்றும் புதுச்சேரி ஏரியாவில் கபாலி படத்தை திரையிட தாணுவிடம் ரூ.5.50 கோடி கொடுத்து உரிமையை பெற்றேன். ஆனால் படம் வெளியாகி ரூ.2.77 கோடி மட்டுமே வசூலை ஈட்டியது. இதனால் எனக்கு ரூ.2.73 கோடி நஷ்டம் ஏற்பட்டது. இதுதொடர்பாக தாணுவிடம் கேட்டபோது ரூ.1.50 கோடி தருவதாக ஒப்புக்கொண்டார். ஆனால் 20 மாதங்களாகிவிட்டது, பணத்தை கொடுக்கவில்லை. கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுக்கிறார்கள். இன்றைய சூழலில் அவர் பணத்தை தரவில்லை என்றால் நான் தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.