‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு பிறகு கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ என்ற படத்தை இயக்கி நடிக்கயிருந்தார் எம்ஜிஆர். ஆனால் அதன்பிறகு அடிமைப்பெண் என்ற படத்தில் நடித்த அவர் பின்னர் முழுநேர அரசியலில் இறங்கி விட்டதால் அந்த படத்தை எடுக்கவில்லை. ஆனால், தற்போது வேல்ஸ் பிலிம் இண்டர்நேசனல் மற்றும் பிரபுதேவா ஸ்டுடியோஸ் இணைந்து கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ படத்தை அனிமேஷன் படமாக தயாரிக்கிறார்கள்.
இந்த படத்தின் பூஜை எம்ஜிஆர் பிறந்த நாளில் நடைபெற்றது. அப்போது ரஜினி-கமல் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த நிலையில், பிப்ரவரி 24-ந்தேதியான நேற்று ஜெயலலிதா பிறந்த நாள் என்பதால் அவரும் அந்த படத்தில் நடிப்பதை அறிவித்தனர். மேலும், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருவரும் இதுவரை 28படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள். அந்த வகையில், கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ அவர்களது 29வது படமாகும் .
இந்த படத்தில் நம்பியார், தேங்காய் சீனிவாசன், நாகேஷ் ஆகியோரும் அனிமேஷன் வடிவில் நடிக்க உள்ளனர். 2019-ம் ஆண்டு ஜனவரியில் எம்ஜிஆர் பிறந்த நாள் அன்று இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். மேலும், இப்படத்தை அருண் மூர்த்தி இயக்குகிறார். டி.இமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு அனைத்து பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதுகிறார். எம்ஜிஆர் படத்திற்கு வைரமுத்து பாடல்கள் எழுதும் முதல் படம் இது.